உள்ளூர் செய்திகள்
நாகை அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தின் அருகேயுள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் உடல் சிதறிய நிலையில் கிடப்பதாக இன்று காலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சென்னை&காரைக்கால் கம்பன் விரைவு ரெயிலில் அடிபட்டு 25 வயதுடைய இளைஞர் கை, கால் தலை சிதறிய நிலையில், உயிரிழந்தது தெரிய வந்தது.
சடலத்தை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த ராஜு தலைமையிலான ரெயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தின் அருகேயுள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் உடல் சிதறிய நிலையில் கிடப்பதாக இன்று காலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சென்னை&காரைக்கால் கம்பன் விரைவு ரெயிலில் அடிபட்டு 25 வயதுடைய இளைஞர் கை, கால் தலை சிதறிய நிலையில், உயிரிழந்தது தெரிய வந்தது.
சடலத்தை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த ராஜு தலைமையிலான ரெயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.