விருத்தாச்சலம் அருகே தடுப்பு கட்டையில் பஸ் மோதி பயணிகள் படுகாயம்
விருத்தாச்சலம்:
சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு சென்றது. இந்த பஸ் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டை மீது மோதியது. இதனால் பஸ்ஸின் முன்பகுதி பெரிதும் சேதமானது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த கண்டக்டர் உட்பட 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
இதைப் பார்த்து அந்த வழியாகச் சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விருதாச்சலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த பஸ்சை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.