பண்ருட்டியில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே கீழ் காங்கேயன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40) கூலித்தொழிலாளி திருமணமானவர். மேலும் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர். உடனே மணிகண்டனை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் முத்தாண்டி குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.