உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வெம்பாக்கம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

Published On 2022-03-16 15:01 IST   |   Update On 2022-03-16 15:01:00 IST
வெம்பாக்கம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை:

வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் ரோடு தெருவை சேர்ந்தவர் காமராஜி 65 இவர் நேற்று இரவு 9 மணி அளவில் அவரது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.
 
அப்போது காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு சென்ற அரசு பஸ் காமராஜி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காமராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சை சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார்.

இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News