உள்ளூர் செய்திகள்
மரத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்த காட்சி.

சேத்துப்பட்டு அருகே மரத்தில் மோதி கார் தீப்பிடித்து டாக்டர் பலி

Published On 2022-03-16 15:01 IST   |   Update On 2022-03-16 15:01:00 IST
சேத்துப்பட்டு அருகே மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 55). இவரது மனைவி சுகந்தி (50). இருவரும் மகப்பேறு டாக்டர்கள். 

ஆரணியில் கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் சுகன்யா புதுச்சேரியில் டாக்டராக உள்ளார். 

நேற்று காலை தனது மகளை புதுச்சேரியில் பார்த்துவிட்டு மீண்டும் ஜெயசீலன் மற்றும் சுகந்தி ஆகியோர் காரில் புதுச்சேரியிலிருந்து சேத்துப்பட்டு வழியாக ஆரணி செல்வதற்காக காரில் வந்தனர்.

காரை டாக்டர் சுகந்தி ஓட்டி வந்தார். கார் சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சுமார் 300 மீட்டர் தூரம் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தத்தனூர் கூட்ரோடு அருகே உள்ள மரத்தில் வேகமாக மோதியது. 

இதில் டாக்டர் ஜெயசீலன் மற்றும் சுகந்தி பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் இருவரையும் காரில் இருந்து வெளியே மீட்டனர் சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி தீ மளமளவென எரிந்தது உடனே தகவல் அறிந்த சேத்துப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். பின்னர் சேத்துப்பட்டுஅரசு மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் ஜெயசீலன் பிதாபமாக இறந்தார். 

சுகந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News