உள்ளூர் செய்திகள்
காட்பாடி அருகே குடிநீர் தொட்டியில் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை
காட்பாடி அருகே குடிநீர் தொட்டியில் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலூர்:
காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 20.). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
இவர் குடிபோதையில் ஊரில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. யாரிடமும் தகராறு செய்ய வேண்டாம் என விக்னேசிடம் அவரது பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விக்னேஷ்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ் வண்டறந்தாங்கல் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி தூணில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் விக்னேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காட்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.