உள்ளூர் செய்திகள்
ஆரணியில் பெற்றோரை இழந்து தவித்து வரும் 3 குழந்தைகளுக்கு உதவிய கலெக்டர்
ஆரணியில் பெற்றோரை இழந்து தவித்து வரும் 3 குழந்தைகளுக்கு படிப்பு செலவு, வீடு கட்ட ஆணையை கலெக்டர் வழங்கினார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் டெய்லர். இவரது மனைவி வேண்டா தம்பதியினருக்கு கார்த்திகா (15) சிரஞ்சீவி (14) நிறைமதி (10) 2 மகள் 1 மகன் உள்ளனர்.
கார்த்திகா அரசு பள்ளியில் 10ம் வகுப்பும் சிரஞ்சீவி 9ம் வகுப்பும் நிறைமதி 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லோகநாதன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். 3 குழந்தைகளை வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று காப்பாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3மாதம் முன்பு வேண்டா புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதனால் தற்போது கார்த்திகா, சிரஞ்சீவி, நிறைமதி ஆகிய 3 குழந்தைகளும் தங்களின் தட்டை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.
மதியம் நேரத்தில் அரசு பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு வாழ்வதாகவும் இரசு உணவு பகலில் உணவு வழங்க யாரும் இல்லாமல் 3 குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.
இதனை அறிந்த கலெக்டர் முருகேஷ் ஆவணியாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று பெற்றோரை இழந்த குழந்தைகளை சந்தித்து 3 குழந்தைகளின் படிப்பு செலவு அனைத்தும் மாவட்ட நிர்வாகமே ஏற்று கொள்ளபடும் என்றும் குடும்பத்தில் இறந்தவர்களின் நிவாரணமாக 22 ஆயிரம் ரூபாய் காசோலை. மேலும் மாதம் தலா 2 ஆயிரம் என 3 குழந்தைகளுக்கு வழங்க ஆணை வழங்கினார்.
மேலும் வீட்டு மனை பட்டா பூர்வீக சொத்தின் பெயர் மாற்றம் வீடு கட்டும் பணி ஆணை மாவட்ட கல்விதுறை சார்பில் 5 ஆயிரம் ரொக்கம் 3 அரிசி சிப்பம் துணிகள் ஆகியவற்றை கலெக்டர் முருகேஷ் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.