உள்ளூர் செய்திகள்
கனரக வாகனம் மோதி மின் கம்பம் சேதம்
கனரக வாகனம் மோதி மின் கம்பம் சேதம் அடந்தது.
கன்னியாகுமரி:
தேரூரில் இருந்து நாகர்கோவிலை நோக்கி ஒரு கனரக வாகனம் வந்தது. அந்த கனரக வாகனம் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் சேதம் அடைந்தது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சுசீந்திரம் மின் வினியோக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே மின்வினியோக இளநிலை பொறியாளர் பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வடலிவியை சேர்ந்த சந்திரகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.