உள்ளூர் செய்திகள்
ஆதிகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
ஆதிகைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா வடக்கூரில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதிகைலாசநாதர் திருக்கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்று ஆவுடையார்கோயில் சுற்றுவட்டார கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 11-ந் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து நான்கு நாட்களாக ஐந்து கால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று ஆறாம் கால யாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து வைத்தியநாதத் தம்பிரான் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆவுடையார்கோயில், புண்னியவயல், கருப்பூர், பாண்டிபத்ரம்,பரமந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து சிவகாமசுந்தரி சமேத ஆதிகைலாசநாதர் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா வடக்கூரில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதிகைலாசநாதர் திருக்கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்று ஆவுடையார்கோயில் சுற்றுவட்டார கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 11-ந் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து நான்கு நாட்களாக ஐந்து கால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று ஆறாம் கால யாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து வைத்தியநாதத் தம்பிரான் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆவுடையார்கோயில், புண்னியவயல், கருப்பூர், பாண்டிபத்ரம்,பரமந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து சிவகாமசுந்தரி சமேத ஆதிகைலாசநாதர் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.