உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆரணி அருகே வாகனம் மோதி ஒருவர் பலி

Published On 2022-03-14 15:05 IST   |   Update On 2022-03-14 15:05:00 IST
ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.
ஆரணி:

ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டில் நடந்து சென்றார். 

அப்போது அந்தவழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ஆரணி தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News