உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கிய காட்சி.

கிராம விளையாட்டு திடல்களை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

Published On 2022-03-14 10:06 IST   |   Update On 2022-03-14 10:06:00 IST
கிராம விளையாட்டு திடல்களை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி :

செட்டிப்பட்டு நம்மவர் கைப்பந்து கழகம் சார்பில்  மாநில அளவிலான கைப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. 

போட்டியில் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கைப்பந்து அணிகள்  கலந்து கொண்டன. இறுதி போட்டியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.  

இறுதிப்போட்டியில்  செட்டிபட்டு நம்மவர் கைப்பந்து அணியும், கடலூர் பிரதர்ஸ் அணியும் மோதின. இதில்  வெற்றி பெற்ற செட்டிப்பட்டு நம்மவர் கைப்பந்து அணிக்கு முதல் பரிசு, கடலூர் பிரதர்ஸ் அணிக்கு 2-ம் பரிசு ஆகியவற்றை அமைச்சர் நமச்சிவாயம்  வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டுத்திடல்களை  மேம்படுத்த அரசின் மூலம் ரூ.1கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

இதற்காக கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து கிராமங்களில் உள்ள விளையாட்டு திடல் கள் சீரமைத்து  தரப்படும். விளையாட்டுகள் மூலம் வாழ்க்கையை மேம் படுத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

Similar News