உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு அருகே டிரைவர் தற்கொலை
சேத்துப்பட்டு அருகே டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர்.
மணிகண்டன் டிரைவர் வேலை செய்து வந்தார். மணிகண்டனுக்கு உடல் நல குறைவால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காததால் மணிகண்டன் மன உளைச்சலுக்கு ஆளானார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மணிகண்டனை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இது குறித்து சேத்துபட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.