உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

போளூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

Published On 2022-03-13 15:07 IST   |   Update On 2022-03-13 15:07:00 IST
போளூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
போளூர்:

போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்ரோட்டில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News