உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆற்காடு அருகே கிணற்றில் தாய், மகள் பிணம் மீட்பு

Published On 2022-03-13 15:02 IST   |   Update On 2022-03-13 15:02:00 IST
ஆற்காடு அருகே கிணற்றில் தாய், மகள் பிணத்தை போலீசார் மீட்டனர்.
ஆற்காடு:

வாலாஜா அடுத்த வீசி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கல்பனா (வயது 32). இவர்களுக்கு ரகு (6) என்ற மகனும் சந்தான ஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். 

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீடான ஆற்காடு கும்மடம் தந்தை பொ¤யார் பகுதியில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற கல்பனா மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாயார் அந்த பகுதியில் தேடியுள்ளார். அப்போது ஆற்காடு முப்பது வெட்டி பகுதியில் விவசாய கிணற்றில் பிணமாக மிதந்து தெரியவந்தது. 

இதையடுத்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News