உள்ளூர் செய்திகள்
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசெந்தில். இவரது மகன் சந்தோஷ் வயது 13. இவர் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்றுமாலை அப்பகுதியில் உள்ள பெத்தாரி குளத்திற்கு சந்தோஷ் மற்றும் நண்பர்கள் குளிக்க சென்றனர்.
அந்த குளத்தில் அங் காங்கே குழி தோண்டி வண்டல் மண் எடுக்கப்பட்டு இருந்ததால் பள்ளம் இருப்பது தெரியாமல் சந்தோஷ்அப் பகுதிக்கு சென்றுதண்ணீரில் முழ்கினான்.
இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சந்தோஷை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.