உள்ளூர் செய்திகள்
வயலிலேயே வி‌ஷம் குடித்து உயிரை மாய்த்த விவசாயி

விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டதால் வயலிலேயே வி‌ஷம் குடித்து உயிரை மாய்த்த விவசாயி

Published On 2022-03-12 16:03 IST   |   Update On 2022-03-12 16:03:00 IST
கடலூர் அருகே விவசாயத்தில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் வயலிலேயே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:

கடலூர் அருகே கிழக்கு ராமபுரம் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 50). விவசாயி. இவர் அதே பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். ஆனால் விவசாயத்தில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததார்.

சம்பவத்தன்று தனது நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக விவசாயி முத்துக்குமாரசாமி இறந்தார்.

இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News