உள்ளூர் செய்திகள்
மாயம்

சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-03-12 16:01 IST   |   Update On 2022-03-12 16:01:00 IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள பாணாசந்து பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகள் பாரதி (வயது 20). கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற பாரதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் பாரதி பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் அருள்ராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பாரதியை தேடி வருகின்றனர்.

இதேபோல சிதம்பரம் அருகே தா.கா.பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா (23). இவர் கடந்த 9-ந்தேதி கடை வீதிக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்ட சூர்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து சூர்யாவின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அண்ணா மலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.

Similar News