உள்ளூர் செய்திகள்
கைது

சேத்தியாத்தோப்பு அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் திருடிய கொள்ளையன் கைது

Published On 2022-03-12 10:24 GMT   |   Update On 2022-03-12 10:24 GMT
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டியன் சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் மற்றும் போலீசார் சென்னை கும்பகோணம் சாலைபூ தங்குடி பகுதியில்வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தண்டகாரன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 19)என தெரியவந்தது. இவரிடம் கடந்த செப்டம்பர் மாதம் சிதம்பரம் அருகே உள்ள விளாகம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள ஒரு ஏ.டி. எம். மில் பணம் எடுக்க கூறி உள்ளார்.

அப்போது விக்னேஷ் அவரிடம் அதில் பணம் வரவில்லை என்று கூறி போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து சென்றார். அதன்பின்னர் ராஜேந்திரன் கொடுத்த ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.34 ஆயிரத்து 850 பணம் திருடி இருப்பதை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் விக்னேசை கைது செய்தனர்.
Tags:    

Similar News