உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டையில் மாற்றுதிறக் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Published On 2022-03-12 15:32 IST   |   Update On 2022-03-12 15:32:00 IST
கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்து பேசும்போது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் நம்பிக்கையோடு வாழ்வதற்கு பெற்றோர்கள், உறவினர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு உதவி உபகரணங்கள், அடையாள அட்டை, பாதுகாப்பு பயணப்படி வழங்கவும், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளனர். முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அலிம் கோ நிறுவனம் மூலம் அளவிட்டு முகாம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் உபகரணங்கள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, பள்ளி தலைமை ஆசிரியர் கள் பழனிவேல், ஷப்னம், பள்ளி துணை ஆய்வாளர் மாரிமுத்து, ஆசிரியர் மணிகண்டன், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் 18 வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Similar News