உள்ளூர் செய்திகள்
பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

மோரக்கனியனூர் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

Published On 2022-03-12 14:56 IST   |   Update On 2022-03-12 14:56:00 IST
மோரக்கனியனூர் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள மோரக் கனியனூர் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் லட்சுமி லலிதா வேலன் மண்டல துணை தாசில்தார் கோமதி, மோரக்கனியனூர் ஊராட்சி மன்ற தலைவர் மணியப்பன், நெடுங்குணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வருவாய் ஆய்வாளர் ஹேமலதா வரவேற்றார்.

முகாமில் சிறப்பு அழைப் பாளராக பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் கலந்து கொண்டு பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா, புதிய பட்டா, பட்டா பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20 பேர் மனு அளித்தனர்.

இதில் உரிய ஆவணம் உள்ள 11 பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக நலத்திட்ட உதவிகளை பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இளங்கோவன் வழங்கினார். 

முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் அப்சர் கலைவாணன் மற்றும் நில அளவைத் துறையினர் வருவாய்த் துறையினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கோரக் கனியனூர் கிராம நிர்வாக அலுவலர் ராகவ சந்திர கோட்டீஸ்வரன் நன்றி கூறினார்.

Similar News