உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

3 வயது குழந்தை தொட்டியில் விழுந்து பலி

Published On 2022-03-11 16:15 IST   |   Update On 2022-03-11 16:15:00 IST
செய்யாறு அருகே தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
செய்யாறு :

செய்யாறு அருகே உள்ள கீழ்நீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 31). இவர் சலவை தொழிலாளி. இவரது மனைவி புனிதா.

இவர்களின் மகள் சுஷ்மிதா (3) நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சுஷ்மிதா அங்குள்ள தொட்டியில் தவறி விழுந்துள்ளார். 

புனிதா நீண்ட நேரமாக குழந்தையை தேடியபோது தொட்டிக்குள் குழந்தை மூழ்கிய நிலையில்  கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக குழந்தையை  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேணுகோபால் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News