உள்ளூர் செய்திகள்
வாலிபர் மர்ம மரணம்- பெண் உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
வேப்பூர் அருகே வாலிபர் மர்ம மரணம் தொடர்பாக பெண் உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி வேல். இவரது மகன் அபிசுந்தர் (வயது 17).
சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த அபிசுந்தர் கடந்த வாரம் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அபிசுந்தர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டு பேசியபோது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மறுமுனையில் பேசினார். அபிசுந்தரின் செல்போன் அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் அருகே கிடந்தது என்று கூறினார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அபிசுந்தரின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அபிசுந்தர் அந்த கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி அபிசுந்தரின் உடலை மீட்டனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அபிசுந்தரின் உடலில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாரோ கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர் என்று அவரது உறவினர்கள் கூறினர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை அபிசுந்தரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாலிபர் அபிசுந்தரின் மரணம் தொடர்பாக திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 33), மணிமேகலை (31), ராமர் (18), பூலாம்பாடியை சேர்ந்த ஸ்ரீரங்கன் (70), தினகரன் (27) ஆகிய 5 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி வேல். இவரது மகன் அபிசுந்தர் (வயது 17).
சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த அபிசுந்தர் கடந்த வாரம் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அபிசுந்தர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டு பேசியபோது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மறுமுனையில் பேசினார். அபிசுந்தரின் செல்போன் அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் அருகே கிடந்தது என்று கூறினார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அபிசுந்தரின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அபிசுந்தர் அந்த கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி அபிசுந்தரின் உடலை மீட்டனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அபிசுந்தரின் உடலில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாரோ கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர் என்று அவரது உறவினர்கள் கூறினர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை அபிசுந்தரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாலிபர் அபிசுந்தரின் மரணம் தொடர்பாக திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 33), மணிமேகலை (31), ராமர் (18), பூலாம்பாடியை சேர்ந்த ஸ்ரீரங்கன் (70), தினகரன் (27) ஆகிய 5 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.