உள்ளூர் செய்திகள்
மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

Published On 2022-03-11 15:14 IST   |   Update On 2022-03-11 15:14:00 IST
கந்தர்வக்கோட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த பள்ளி  கல்வித்துறை சார்பில் மாற்றுத் திறனாளி  மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

பேரணியை கந்தர்வ கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

பேரணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிரகாஷ், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி,  

ஆசிரியர் பயிற்றுநர்கள் பாரதி தாசன்,  ராஜேஸ்வரி, ஆசிரியர்கள்  பாக்கியராஜ்,சாந்தி, மாலா, மைவிழி, சிறப்பாசிரியர்கள்  சரண்யா, ரம்யா, ராணி, அறிவழகன், பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். 

கந்தர்வகோட்டை நடுநிலைப்பள்ளியில் பேரணி தொடங்கி   முக்கிய வீதிகள் வழியாக சென்று  மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. 

பேரணியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவேண்டி வாசகங்கள் உள்ளபதாகை களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பேரணி ஏற்பாடுகளை  வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கிலிமுத்து செய்திருந்தார்.

Similar News