உள்ளூர் செய்திகள்
கந்தர்வக்கோட்டை அருகே சிறப்பு கால்நடை மருத்துவமுகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் நெப்புகையில் சிறப்பு கால் நடை மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
முகாமில் வேலாடிப்பட்டி அரசு கால்நடை சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் வளர்க்கக் கூடிய செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் 1071 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சிறப்பாக முறையில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.