உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

டிரைவர் தற்கொலை

Published On 2022-03-11 07:57 GMT   |   Update On 2022-03-11 07:57 GMT
டிரைவர் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 35). இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை.

கோயமுத்தூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ராமராஜன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கிராமமான மாங்கோட்டைக்கு வந்தவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் சம்பவத்தன்று ராமராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ராமராஜனின் அண்ணன் பிரபு கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News