உள்ளூர் செய்திகள்
கைது

சாராயம் விற்ற வாலிபர் கைது

Published On 2022-03-10 16:01 IST   |   Update On 2022-03-10 16:01:00 IST
புதுப்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராயம், 25 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுப்பேட்டை:

புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல் அருங்குணம் சுடுகாடு பகுதியில் பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 20) என்பவர் சாராயம் மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது, இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராயம், 25 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News