உள்ளூர் செய்திகள்
வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா
ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு வீரமா காளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் வீரமாகாளியம்மன்கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.
காப்புக் கட்டியதுடன் ஒவ்வொரு வீட்டிலும் மண்சட்டிகள் உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானியங்களை வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை,
தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று மதியம் ஊர்வலமாக தூக்கிச்சென் று மண்ணடித்திடலில் ஒன்று சேர்ந்து கல்லணை கரையோரம் உள்ள பெரியகுளத்தில் விட்டனர்.
மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று மாலை மது எடுப்பு திருவிழா நடந்தது. மது எடுப்பு திருவிழாவில் மேற்பனைக்காடு கிராம மக்கள் தென்னம் பாலைகளை நெல் நிரப்பிய குடங்களில் வைத்து மலர்களால் அலங்கரித்து கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக தூக்கிச் மண்ணடித்திட ஆற்றங்கரை காளியம்மன் கோவில் சுற்றி அருகே போட்டுவிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் வீரமாகாளியம்மன்கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.
காப்புக் கட்டியதுடன் ஒவ்வொரு வீட்டிலும் மண்சட்டிகள் உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானியங்களை வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை,
தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று மதியம் ஊர்வலமாக தூக்கிச்சென் று மண்ணடித்திடலில் ஒன்று சேர்ந்து கல்லணை கரையோரம் உள்ள பெரியகுளத்தில் விட்டனர்.
மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று மாலை மது எடுப்பு திருவிழா நடந்தது. மது எடுப்பு திருவிழாவில் மேற்பனைக்காடு கிராம மக்கள் தென்னம் பாலைகளை நெல் நிரப்பிய குடங்களில் வைத்து மலர்களால் அலங்கரித்து கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக தூக்கிச் மண்ணடித்திட ஆற்றங்கரை காளியம்மன் கோவில் சுற்றி அருகே போட்டுவிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.