உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பாஸ்போர்ட் பெற போலி சான்றிதழ்கள் கொடுத்த 3 பேர் மீது வழக்கு

Published On 2022-03-10 15:07 IST   |   Update On 2022-03-10 15:07:00 IST
பாஸ்போர்ட் பெற போலி சான்றிதழ்கள் கொடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

போலி சான்றிதழ்களை இணைத்து பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 43). இவர், திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அப்போது அரிமளம் அரசுப் பள்ளியில் படித்ததாக போலியான மாற்றுச் சான்றிதழ் இணைத்திருந்தார்.

இதுகுறித்து பாஸ்போர்ட் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் செல்லதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் புகார் அளித்தார். இதேபோல, அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ரசாக் (45). இவர், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பெறப்பட்டதாக போலி பிறப்புச் சான்றிதழை இணைத்து பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளார். இவர் மீது பாஸ்போர்ட் அலுவலக கண்காணிப்பாளார் ஜெயந்தி புகார் அளித்தார்.

மேலும் வத்தனாக்கோட்டையை சேர்ந்த முருகேசன் மகள் கார்த்திகா (24), இவர் போலியான பிறப்பு சான்றிதழை தயாரித்து விண்ணப்பித்துள்ளார். இவர் மீது பாஸ்போர்ட் அலுவலக கண்காணிப்பாளர் ஜெயந்தி புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரில், மாவட்ட குற்றப்ப பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News