உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆரணி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி சாவு

Published On 2022-03-10 15:02 IST   |   Update On 2022-03-10 15:02:00 IST
ஆரணி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவருக்கு சதீஷ் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் உள்ளனர்.

சதீஷ் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார் சந்தியா ஆரணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டதாரி முதலாமாண்டு படித்து வருகிறார்.

வீட்டில் வேலை செய்யாத காரணத்தினால் பெற்றோர்கள் சந்தியாவை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சந்தியா அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News