உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரிய நாயகி அம்மன் கோவில் மயான கொள்ளை
கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மணிமுக்தா ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மயானத்தில் வைத்து படையலிட்டு, சுண்டலை சூரையிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சித்தலூரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கடந்த 1- ந் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன்படி தினமும் மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை மணிமுக்தா ஆற்றில் இருந்து பூங்கரகம் அலங்கரித்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது.
மேலும் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மணிமுக்தா ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மயானத்தில் வைத்து படையலிட்டு, சுண்டலை சூரையிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை மாலை விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அறநிலையத் துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.