உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கணக்காளர் சஸ்பெண்டு

Published On 2022-03-09 15:44 IST   |   Update On 2022-03-09 15:44:00 IST
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கணக்காளரை கலெக்டர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
அரக்கோணம்:

திமிரி, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களில் நிதி முறை கேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. 

இதனையடுத்து சென்னையில் இருந்து உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்குனர், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிதி முறைகேடு தொடர்பாக தணிக்கையில் ஈடுபட்டார். 

இதில் 2019-2020-ம் ஆண்டில் நிதி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சமீபத்தில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மாறுதலாகி அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்து வரும் கணக்காளரை சஸ்பெண்டு செய்து ராணிபேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News