உள்ளூர் செய்திகள்
தலைவர் சுந்தரி அழகப்பன்

பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு

Published On 2022-03-08 15:09 IST   |   Update On 2022-03-08 15:09:00 IST
பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தேர்வானார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் தேர்தல் பேரூராட்சி மன்றக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமைக்கழகத்திலிருந்து தி.மு.க. வேட்பாளராகஅறிவிக்கப்பட்ட 10&வது வார்டு வேட்பாளர் சுந்தரி அழகப்பன் தேர்தல் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான மு.செ.கணேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

தி.மு.க. வேட்பாளர் சுந்தரி அழகப்பனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால்   அவர் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.    

இதையடுத்து பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு மதியம் 2.30 மணியளவில் தேர்தல்   நடைபெற்றது. இதில் 3&வது வார்டு உறுப் பினர்  கா.புவனேஸ்வரி, 7&வது வார்டு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். 
தேர்தலில் 7&வது வார்டு உறுப்பினர் வெங்கடேஷ் 8 வாக்குகளும், கா.புவனேஸ்வரி 6 வாக்குகளும் பெற்றனர். இதில் வெங்கடேஷ் வெற்றி பெற்று துணைத்தலைவரானார். 

தேர்வு செய்யபட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். 

பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News