உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உடுமலையில் பூசணிக்காய் விற்பனை அமோகம்

Published On 2022-03-07 07:58 GMT   |   Update On 2022-03-07 08:12 GMT
குறைந்த விலையில் அதிக சத்துள்ள பூசணிக் காய்களை மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
உடுமலை:

உடுமலை மற்றும் மடத்துக்குளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம், பாப்பான்குளம், மடத்துக்குளம், காரத்தொழுவு  போன்ற பல்வேறு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில்  பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொங்கல் திருநாள் முடிந்த போதிலும் மற்ற  பருவத்திலும்  வருடம் முழுவதும்  பூசணிக்காயை சாகுபடி செய்து அருகில் உள்ள கணியூர் கமிஷன் கடை மற்றும் மடத்துக்குளம் வாரச்சந்தை போன்ற பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.  

குறைந்த விலையில் அதிக சத்துள்ள பூசணிக் காய்களை மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். நியாயமான விலை என்பதால் விற்பனையாளர்களும் அதனை வாங்குபவர்களும், ஒரே நேரத்தில் பயன் பெற்று வருகின்றனர். கோடை வெயிலுக்கு தினந்தோறும் அன்றாட காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய சத்துள்ள உணவாக பூசணிக்காய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:    

Similar News