உள்ளூர் செய்திகள்
கடலூர் முதுநகர் துறைமுக பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள்
கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்ததின்பேரில் கடலூர் மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர்:
வங்ககடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
இதனால் நேற்று முதல் நாளை (7-ந் தேதி) வரை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்ததின்பேரில் கடலூர் மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது கிராமங்களிலேயே முடங்கினர். 2-வது நாளாக இன்றும் அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் தங்களது படகுகளை கடலூர் முதுநகர் துறைமுக பகுதியில் பாதுகாப்பாக அவர்கள் நிறுத்தி உள்ளனர்.