உள்ளூர் செய்திகள்
மாயம்

சிதம்பரம் அருகே மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-03-06 16:08 IST   |   Update On 2022-03-06 16:08:00 IST
சிதம்பரம் அருகே மாணவி உள்பட 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (வயது 32), இவரது கணவர் ரவிச்சந்திரன். 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரேமா சிவாயத்தில் உள்ள தனது தாய் அஞ்சம்மாள் வீட்டில் தங்கியிருந்தார்.

மளிகை பொருட்கள் வாங்கி வருவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற பிரேமா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் பிரேமா கிடைக்காத நிலையில் இதுகுறித்து சிதம்பரம் சரக போலீசில் அஞ்சம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரேமாவை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

இதேபோல சிவகங்கை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் பிரீத்தி (வயது 19). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கடந்த 28-ந் தேதி முதல் பிரீத்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சங்கர் ஊரிலிருந்து புறப்பட்டு சிதம்பரம் வந்து பார்த்தபோது பிரீத்தியை காணவில்லை. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசில் சங்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரீத்தியை தேடி வருகின்றனர்.

Similar News