உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஜோலார்பேட்டை அருகே ராணுவ வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-03-06 14:35 IST   |   Update On 2022-03-06 14:35:00 IST
ஜோலார்பேட்டை அருகே ராணுவ வீரர் மனைவி தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 31). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி (27). இவர்களுக்கு யாழினி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

ஜெகன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு ஜெகனுக்கும், ரேவதிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.  

இதனால் மன உளைச்சலில் இருந்த ரேவதி நள்ளிரவு வீட்டில் அறையில் சென்று சேலையால் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து ஜெகன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் குடியாத்தத்தில் வசிக்கும் ரேவதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். 

போலீசார் விரைந்து வந்து ரேவதியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் திருப்பத்தூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News