உள்ளூர் செய்திகள்
வீட்டு வசதி வாரிய தலைவர் மதிவாணன் ஆய்வு

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்படவுள்ள இடத்தில் ஆய்வு

Published On 2022-03-06 10:04 IST   |   Update On 2022-03-06 10:04:00 IST
வேதாரண்யத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்படவுள்ள இடத்தில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு நடத்தினார்.
வேதாரண்யம்:

தமிழக அரசின் சார்பில் வேதாரண்யத்தில் ஒரு கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அமையவுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இடத்தை ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மதிவாணன் ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசின் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை அனைத்து அடிப்படை வசதிகளுடன் நகர பகுதியில் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

இத்தகவல் அறிந்த தமிழக முதல்வர் வேதாரண்யம் நகர பகுதியில் மூன்றடுக்கு கொண்ட கட்டிடத்தில் தங்கும் விடுதி, படிப்பகம், உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டுமான பணிக்கு ரூபாய் ஒரு கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இவ்விடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் மாநில திமுக விவசாய அணி செயலாளருமான மதிவாணன் ஆய்வு செய்தார். ஆய்வுவின் போது வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, வார்டு உறுப்பினர் ரம்யா, வழக்கறிஞர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அரசின் ஆதிதிராவிட மாணவர்கள் பயிலும் பள்ளி மற்றும் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் ஆதிதிராவிட மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Similar News