உள்ளூர் செய்திகள்
விநியோகிக்கப்படாத பொங்கல் தொகுப்பை சிறப்பு பள்ளிக்கு வழங்க வேண்டும்
விநியோகிக்கப்படாத பொங்கல் தொகுப்பை சிறப்பு பள்ளிக்கு வழங்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி பகுதியில் 122 நியாவிலை கடைகள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த ஜனவரி மாதம், தைத்திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனால் அநேக பயனாளிகள் பயனடைந்தனர். இருந்த போதிலும் வெளியூர்களில் தங்கியுள்ள போன்ற காரணங்களால் ஒரு சில பயனாளிகளால் பொங்கல் தொகுப்புகளை பெறமுடியாத சூழ்நிலை இருந்து வந்துள்ளது.
எனவே 10ற்கும் மேற்ப்பட்ட கடைகளில் 119 தொகுப்புகள் மீதமடைந்தன. அதனை பயனுள்ள வகையில் மாற்றும் விதமாக, மாவட்ட கலெக்டர் கவிதாராமு அறந்தாங்கி காரைக்குடி சாலையில் உள்ள செவித்திறன் குறைந் தோருக்கான சிறப்புப் பள்ளியில் வழங்க உத்தர விட்டார்.
உத்தரவின் அடிப்படையில் கோட்டாட்சியர் சொர்ணராஜ், வட்டவழங்கல் தாசில்தார் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு பள்ளிக்கு சென்று பொங்கல் தொகுப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர்கள், சிறப்பு பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.