உள்ளூர் செய்திகள்
சிறு பான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

Published On 2022-03-05 15:10 IST   |   Update On 2022-03-05 15:10:00 IST
சிறு பான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சிறு பான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அரசு துறை  அலுவலர்கள்  மற்றும்  சங்க  பொறுப்பாளர்கள்  இடையே  நலத்திட்டங்கள்  தொடர்பாக  விரிவான  ஆய்வினை  சிறுபான்மை நலத்துறை  இயக்குநர் மேற்கொண்டனர்.  மேலும்  நிகழ்வில் கிறித்தவ  மகளிர்  உதவும்  சங்கம்,  முஸ்லீம்  உதவும்  சங்கம்  மூலம் 10 பயனாளிகளுக்கு  ரூ.1,33,500&க்கான காசோலை கள் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் வழங்கினார்.

இதனைதொடர்ந்து  டாம்கோ  மூலம்   குழுக் கடன்  பெற்ற  24   பயனாளிகளை  முறையே, புதுக்கோட்டை   சின்ன  ரயில்வே கேட்  மற்றும்  கலீப் நகர் 2ம்  விதியிலும்  நேரில்  சென்று திட்டங்களின்  பயன்  குறித்தும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.

அதே  போன்று  மாவட்ட  முஸ்¢லீம்  மகளிர்  உதவும் சங்கம்,  மாவட்ட கிறித்தவ  மகளிர்  உதவும்  சங்கம்  மூலம்  நலத்திட்ட  உதவிகள்  பெற்ற பயனாளிகளிடமும்  திட்டத்தின்  பயன்பாடு  குறித்து  சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்கள்.

  நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) மாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.



Similar News