உள்ளூர் செய்திகள்
திமுக

உளுந்தூர்பேட்டையில் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி

Published On 2022-03-04 16:08 IST   |   Update On 2022-03-04 16:08:00 IST
உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு வேறு யாரும் தாக்கல் செய்யாத நிலையில் திமுக முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு ஒருமனதாக வெற்றி பெற்றார்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை முதல் நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள் 20 பேர் வெற்றி பெற்ற நிலையில் நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு விண்ணப்பம் செய்தார். உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு வேறு யாரும் தாக்கல் செய்யாத நிலையில் திமுக முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு ஒருமனதாக வெற்றி பெற்றார்.

Similar News