உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவி மாயமான சம்பவத்தில் போலீசார் விசாரணை
புதுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பனைய கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகீம். இவரது மகள் குர்சித் பேகம்(வயது20).
இவர் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு ஆட்டாங்குடியில் உள்ள உறவினர் வீட்டி தங்கி பயின்று வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர். வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது தாய் நூர்ஜகான் (48) கொடுத்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரணம் எதுவும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.