உள்ளூர் செய்திகள்
கைது

குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2022-03-02 14:09 IST   |   Update On 2022-03-02 14:09:00 IST
குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

குவைத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து ரூ.40.55 லட்சம் மதிப்புள்ள 880 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்தவர் கொடுத்த தகவலின் படி அதனை வாங்க விமானநிலையத்தில் காத்திருந்த ஒருவரையும் அதிகாரிகள் பிடித்தனர். கைதான 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Similar News