உள்ளூர் செய்திகள்
ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பு
கோவில் விசேஷம் என்பதால் மஞ்சள் சேலை, மஞ்சள் வேட்டி, காவி கலர் துண்டு வியாபாரம் அதிக அளவில் இருந்தது. மேலும் இதற்கான ஆர்டர் அதிகளவில் வந்து இருந்தது. இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.
ஈரோடு:
கோவில் விசேஷம் என்பதால் மஞ்சள் சேலை, மஞ்சள் வேட்டி, காவி கலர் துண்டு வியாபாரம் அதிக அளவில் இருந்தது. மேலும் இதற்கான ஆர்டர் அதிகளவில் வந்து இருந்தது. இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது.
இங்கு தினசரி கடைகளும், வார சந்தை கடைகளும் செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க் கிழமை மாலை வரை நடைபெரும்.
இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.
சந்தை நாட்களில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். விசேஷ நாட்களில் கூடுதலாக வர்த்தகம் நடைபெறும்.
இந்நிலையில் கொரோனா தாக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மாசி மாதம் தொடங்கியதால் கோவில், திருமண விசேஷங்கள் இந்த மாதம் அதிகளவில் வருகிறது.
இதனால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இன்று வழக்கம் போல் ஜவுளி சந்தை கூடியது. கோவில் விசேஷம் என்பதால் மஞ்சள் சேலை, மஞ்சள் வேட்டி, காவி கலர் துண்டு வியாபாரம் அதிக அளவில் இருந்தது. மேலும் இதற்கான ஆர்டர் அதிகளவில் வந்து இருந்தது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் 30 சத வீதம் வரை நடைபெற்றது.
இதேபோல் உள் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து இருந்ததால் சில்லரை விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.