உள்ளூர் செய்திகள்
ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம்

Published On 2022-02-28 06:20 GMT   |   Update On 2022-02-28 06:20 GMT
தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
கரூர்:


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74&வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோகைமலை மேற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வினர் எழுபத்தி நான்கு பேர் ரத்த தானம் வழங்கினார்கள். அவர்களுக்கு ரத்ததானம் வழங்கிய சான்றுகளையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

முகாமில் தோகைமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரெங்கசாமி, தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம். எஸ்.கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா பழனிச்சாமி, வழக்கறிஞர் குமார்  மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News