உள்ளூர் செய்திகள்
சாலையில் கிடந்த பணத்தை போலீசிடம் பெண் ஒப்படைத்த காட்சி.

பாளையில் சாலையில் கிடந்த ரூ.27 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த பெண்

Published On 2022-02-27 09:27 GMT   |   Update On 2022-02-27 09:27 GMT
பாளை அருகே சாலையில் பெண் நடந்து செல்லும் போது கீழே கிடந்த ரூ.27 ஆயிரத்தை எடுத்து போலீசிடம் ஒப்படைத்தார்.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள மேல புத்தநேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். 

இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 55).இவர் பாளை மகாராஜா நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு வந்த அவர் பஸ்சில் இருந்து இறங்கி மகாராஜா நகர் ரவுண்டானாவில் இருந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்குள்ள கனரா வங்கி ஏ.டி.எம். அருகே சென்றபோது சாலையில் ரூ.26,830 கிடந்தது. உடனே அதனை பொன்னம்மாள் எடுத்துக்கொண்டு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 

அந்த பணம் யாருடையது என்பது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர் . இதற்கிடையே பணத்தை போலீசில் ஒப்படைத்த அந்த பெண்ணை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
Tags:    

Similar News