உள்ளூர் செய்திகள்
பெண்களுக்கு தடையின்றி கடன் வழங்க வேண்டும்-விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
வங்கிகளில் பெண்களுக்கு தடையின்றி கடன் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்களை போன்று குடும்ப சொத்தில் பெண்க ளுக்கும் உரிமை உண்டு என அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள நிலையில் பெண்கள் பெயரில் வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் போது அவர்களுக்கு பத்திர பதிவில் 50 சதவிகிதம் சிறப்பு சலுகை அரசு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் அப்படி பெண்கள் பெயரில் வாங்கிய நிலம், மனைகள், வீடு போன்ற சொத்துக்களை வைத்து வங்கிகளில் கடன் பெற சென்றால் வங்கிகள் அவர்களிடம் 50 சதவிகிதம் சிறப்பு அதிகாரத்தை ஏற்காமல் அரசு சலுகையில் வழங்கியுள்ள 50 சதவிகித கட்டணத்தையும் பத்திரபதிவு அலுவலகத்தில் செலுத்தி விட்டு வந்தால் மட்டுமே அவர்களின் கடன் பெறும் மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளபடுவதாக கூறப்படும் செயல் அரசியலமைப்பு சட்டத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.
எனவே புதுவையை ஆளக்கூடிய என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டம் பெண்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பாதுகாக்கும் வகையில் பெண்கள் பெயரில் உள்ள சொத்து பத்திரங்களை வங்கிகளில் எந்தவித தடையுமின்றி கடன் பெறும் வகையில் வங்கி அதிகாரிகளை அழைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.