உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 பேரூராட்சிகளில் டெபாசிட் இழந்த 178 வேட்பாளர்கள்

Published On 2022-02-24 09:29 GMT   |   Update On 2022-02-24 09:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 6 பேரூராட்சிகளில் 178 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த 6 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 178 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

அதன் விவரம் வருமாறு: ஊத்தங்கரை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 87 பேர் போட்டியிட்டதில் 53 பேரும், பர்கூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 57 பேர் போட்டியிட்டதில் 27 பேரும்,

நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 53 பேர் போட்டியிட்டதில் 22 பேரும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 17 வார்டுகளில் 72 பேர் போட்டியிட்டதில் 33 பேரும், கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 64 பேர் போட்டியிட்டதில் 25 பேரும், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 50 பேர் போட்டியிட்டதில் 18 பேரும் என மொத்தம் 6 பேரூராட்சியில் போட்டியிட்ட 383 வேட்பாளர்களில் 178 வேட்பாளர் தங்களது டெபாசிட்டுகளை இழந்தனர்.
Tags:    

Similar News