உள்ளூர் செய்திகள்
மாணவர்கள் சாலை மறியல் செய்தபோது எடுத்தப்படம்.

மாணவர்கள் சாலை மறியல்

Published On 2022-02-24 13:39 IST   |   Update On 2022-02-24 13:39:00 IST
பேருந்து வசதி கோரி மாணவர்கள் சாலை மறியல் நடத்தினர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை மார்க்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Similar News