உள்ளூர் செய்திகள்
பேருந்து வசதி கோரி மாணவர்கள் சாலை மறியல் நடத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை மார்க்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை மார்க்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.