உள்ளூர் செய்திகள்
படகை சரிசெய்ய கடலில் குதித்த மீனவர் பிணமாக மீட்பு
விசைப்படகை சரிசெய்வதற்காக கடலில் குதித்த மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினமும் 200க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
இது போல் மீன்பிடித் தொழிலுக்கு செல்லுகின்ற விசைப்படகுகளை, வேலை முடிந்ததும், துறைமுகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், கடலில் நங்கூரமிட்டு கட்டி நிறுத்திவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஷாலினி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சுந்தரபாலு மற்றும் 2 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகியுள்ளனர்.
அப்போது படகின் அடியில் நங்கூரக்கயிறு, வலை போன்ற ஏதேனும் பொருட்கள் சிக்கியுள்ளதா என்பதை பார்ப்பதற்காக மீனவர் சுந்தரபால் நீரில் குதித்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததை அறிந்த சக மீனவர்கள் சந்தேகமடைந்து கடலில் குதித்து தேடியுள்ளனர்.
ஆனால் மீனவர் சுந்தரபால் கிடைக்கவில்லை. அதனையடுத்து கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று மாலை முதல் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
தொடர்ந்து சக மீனவர்கள், கடலோர காவல்படையினர் ஆகியோர் தேடி வந்த நிலையில், மாயமான மீனவர் சுந்தரபால் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சபம்வம் குறித்து வந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரபால் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினமும் 200க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
இது போல் மீன்பிடித் தொழிலுக்கு செல்லுகின்ற விசைப்படகுகளை, வேலை முடிந்ததும், துறைமுகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், கடலில் நங்கூரமிட்டு கட்டி நிறுத்திவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஷாலினி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சுந்தரபாலு மற்றும் 2 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகியுள்ளனர்.
அப்போது படகின் அடியில் நங்கூரக்கயிறு, வலை போன்ற ஏதேனும் பொருட்கள் சிக்கியுள்ளதா என்பதை பார்ப்பதற்காக மீனவர் சுந்தரபால் நீரில் குதித்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததை அறிந்த சக மீனவர்கள் சந்தேகமடைந்து கடலில் குதித்து தேடியுள்ளனர்.
ஆனால் மீனவர் சுந்தரபால் கிடைக்கவில்லை. அதனையடுத்து கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று மாலை முதல் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
தொடர்ந்து சக மீனவர்கள், கடலோர காவல்படையினர் ஆகியோர் தேடி வந்த நிலையில், மாயமான மீனவர் சுந்தரபால் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சபம்வம் குறித்து வந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரபால் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.