உள்ளூர் செய்திகள்
அயராது உழைத்த தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி- விஜய் வசந்த்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் விஜய் வசந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. இத்தேர்தலில் தி.மு.க. சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இதே போல 132 நகராட்சிகளிலும், 435 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.
கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் போன்றவை அதிகளவில் வார்டுகளை கைப்பற்றி உள்ளன.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் அயராது உழைத்த தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.
தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. இத்தேர்தலில் தி.மு.க. சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இதே போல 132 நகராட்சிகளிலும், 435 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.
கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் போன்றவை அதிகளவில் வார்டுகளை கைப்பற்றி உள்ளன.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் அயராது உழைத்த தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.